
சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய,…
இன்றைய தினம் (16) மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு.வெடிபொருட்களின் பாரிய பாதுகாப்பு
நல்லாசியுடன் வாழ்த்துகிறோம்..
நாளை 29.05.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள் பரீட்சையில் தோற்றிச் சித்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அனைவரையும் மனமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
2024 (2025) ஆண்டுக்கான மூன்றாம் தவணை தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் வகுப்பு ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் அதிபர்,பிரதி அதிபர், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களினால் மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
அன்புக்குரிய யோகபுரம் ம.வியின் உள்நாட்டு, வெளிநாட்டு பழைய மாணவர்களே!நம் அனைவரையும் நாம் தற்போது இருக்கும் அந்த நல்ல நிலைக்கு உரிய தாய் எமது யோகபுரம் ம.வியே ! எங்களை வளர்த்த அந்த தாயவளை நாமும் நன்றாய் பார்த்து வளர்த்திட வேண்டும்.இதற்காக நாம் ஒரு பொதுக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அதில் நாம் எல்லோரும் கலந்துரைடலாம் என பழைய மாணவர் சங்க கமிட்டி முடிவு செய்துள்ளது.ஆகவே எதிர்வரும் 15.12.2024 ஞாயிறன்று s.l .time மாலை 04.00 மணிக்கு…
ஆங்கில தினம் , தமிழ் தினம், உலக மண் தினம், விஞ்ஞான வினாடி வினா போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய, முல்லைத்தீவு – துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர். உயர்தரத்திற்கான தகுதி அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A C சித்திகளையும், மூன்று மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர். மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 83.3 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.