சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய, முல்லைத்தீவு – துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர். உயர்தரத்திற்கான தகுதி  அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A C சித்திகளையும், மூன்று மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர்.  மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 83.3 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 

Read More

அகில இலங்கை சைவசமய பாடப் பரீட்சையில் வடமாகாண ரீதியில் சிறப்பு சித்தி.

விவேகானந்த சபை – கொழும்பு.அகில_இலங்கை_சைவசமய_பாடப்_பரீட்சையில்_வடமாகாண_ரீதியில்_சிறப்பு_சித்தி. செல்வி_லக்சிகா_தயானந்தன் இன்றைய தினம் இவருக்கான சிறப்புச் சான்றிதழும் பண வவுச்சரும் வித்தியாலய முதல்வர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.சைவ சமயத்தின் அடையாளங்களை வித்திட்டுச்செல்லும் கொழும்பு, விவேகானந்த சபையினருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.வளர்க உம் சைவப்பணி.வாழ்க வளமுடன்.

Read More

உயர்தரப் (2023 )பரீட்சையில் துணுக்காய் வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற எமது பாடசாலை

கடந்த வாரம் வெளியான உயர்தர பரிட்சையின் பெறுபேறுகளின் அடிப்டையில் எமது பாடசாலையானது துணுக்காய் வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பதிவு செய்துள்ளது .அந்தவகையில் 12 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்துக்கு தெரிவாகி உள்ளனர் குறிப்பாக இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யபட்டது சிறப்பம்சம் ஆகும் இந்த சிறந்த பெறுபேற்றை அடைவதற்கு உதவிய அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கல்விச்சமூகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்

Read More

ஓய்வு நிலை அதிபர் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா

“#விழுதுகள்_கூடி_வேரில்_சந்திப்போம்“ 12.05.2024 அன்று நடைபெற்ற எமது பாடசாலையில் கடமையாற்றிய ஓய்வநிலை அதிபர், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா. முழு அனுசரணை : #சொக்கலிங்கம்_சரஸ்வதி_குடும்பம்_பாரதிநகர்_யோகபுரம்.

Read More

மாகாண மட்ட தமிழ் தினப்போட்டியில் இரண்டாம் நிலை

16.09.2023 மாகாண மட்ட தமிழ் தினப்போட்டியில்… தமிழறிவு வினாடிவினாப் போட்டியில் எமது வித்தியாலய அணி இரண்டாம் நிலையினைப் பெற்றுக்கொண்டது….. இம்மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்.. வழிப்படுத்திய ஆசியர்களுக்கும், நெறிப்படுத்திய அதிபர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த வலயக்கல்விப் பணிமனையின் துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி

Read More

உயர் தர பரீட்சை இல் மாணவர்கள் சாதனை

கடந்த கிழமை உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியானமை யாவரும் அறிந்ததே.எமது பாடசாலையில் கலைப்பிரிவில் 03மாணவர்கள்3A சித்திகளையும் 01 மாணவர் 2A,B சித்தி களையும் பெற்றமை சிறப்பம்சங்கள் ஆகும்.2010ம் ஆண்டின் பின்னர் கிடைத்த சிறந்த பெறுபேறு இதுவாகும்.2017ல் இரு கணித வர்த்தக பிரிவு மாணவர்கள் 3A சித்தி களை பெற்றிருந்தனர்.10 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

துணுக்காய் வலய க. பொ. த(உ / த )மாணவர்களுக்கான செயலமர்வு

எமது பாடசாலையில் கடந்த 02,03.2023 ( சனி ஞாயிறு) தினங்களில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர கலை வர்த்தக பிரிவு மாணவர்களுக்குகணக்கியல்வணிகவியல்தமிழ்புவியியல்போன்ற பாடங்கள் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ஆன திரு.t.வேல்நம்பி தலைமையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களானதிரு.n.பிரதீபராஜாதிரு.c.உமாகாந்திரு.a. அஜந்தகுமார்திரு..ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் 181 மாணவர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இச்செயலமர்வு மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்றது.செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் கருத்துக்கள் வழங்கும் போது மிகவும் பயன்பாடு உடையதாக இருந்தது என…

Read More