பழைய மாணவர் சங்க கலந்துரையாடல்
அன்புக்குரிய யோகபுரம் ம.வியின் உள்நாட்டு, வெளிநாட்டு பழைய மாணவர்களே!நம் அனைவரையும் நாம் தற்போது இருக்கும் அந்த நல்ல நிலைக்கு உரிய தாய் எமது யோகபுரம் ம.வியே ! எங்களை வளர்த்த அந்த தாயவளை நாமும் நன்றாய் பார்த்து வளர்த்திட வேண்டும்.இதற்காக நாம் ஒரு பொதுக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அதில் நாம் எல்லோரும் கலந்துரைடலாம் என பழைய மாணவர் சங்க கமிட்டி முடிவு செய்துள்ளது.ஆகவே எதிர்வரும் 15.12.2024 ஞாயிறன்று s.l .time மாலை 04.00 மணிக்கு…
போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கும் நிகழ்வு
ஆங்கில தினம் , தமிழ் தினம், உலக மண் தினம், விஞ்ஞான வினாடி வினா போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய, முல்லைத்தீவு – துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர். உயர்தரத்திற்கான தகுதி அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A C சித்திகளையும், மூன்று மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர். மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 83.3 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
யோகபுரம் மகாவித்தியாலயம் முதலிடம்
யோகபுரம் மகாவித்தியாலயம் முதலிடம் 09.07.2024 துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த 03.07.2024 மற்றும் 04.07.2024 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளதுஇதன்போது யோகபுரம் மகாவித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.இந்த போட்டிகளில் யோகபுரம் ஆரம்ப பாடசாலை 5 புள்ளிகளையும் , மயில்வாகனம்தமிழ் வித்தியாலயம் 2.5…
மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
இன்று (12.07.2024) எமது வித்தியாலயத்தின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அகில இலங்கை சைவசமய பாடப் பரீட்சையில் வடமாகாண ரீதியில் சிறப்பு சித்தி.
விவேகானந்த சபை – கொழும்பு.அகில_இலங்கை_சைவசமய_பாடப்_பரீட்சையில்_வடமாகாண_ரீதியில்_சிறப்பு_சித்தி. செல்வி_லக்சிகா_தயானந்தன் இன்றைய தினம் இவருக்கான சிறப்புச் சான்றிதழும் பண வவுச்சரும் வித்தியாலய முதல்வர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.சைவ சமயத்தின் அடையாளங்களை வித்திட்டுச்செல்லும் கொழும்பு, விவேகானந்த சபையினருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.வளர்க உம் சைவப்பணி.வாழ்க வளமுடன்.