சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய, முல்லைத்தீவு – துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர். உயர்தரத்திற்கான தகுதி  அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A C சித்திகளையும், மூன்று மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர்.  மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 83.3 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 

Read More

அகில இலங்கை சைவசமய பாடப் பரீட்சையில் வடமாகாண ரீதியில் சிறப்பு சித்தி.

விவேகானந்த சபை – கொழும்பு.அகில_இலங்கை_சைவசமய_பாடப்_பரீட்சையில்_வடமாகாண_ரீதியில்_சிறப்பு_சித்தி. செல்வி_லக்சிகா_தயானந்தன் இன்றைய தினம் இவருக்கான சிறப்புச் சான்றிதழும் பண வவுச்சரும் வித்தியாலய முதல்வர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.சைவ சமயத்தின் அடையாளங்களை வித்திட்டுச்செல்லும் கொழும்பு, விவேகானந்த சபையினருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.வளர்க உம் சைவப்பணி.வாழ்க வளமுடன்.

Read More

உயர் தர பரீட்சை இல் மாணவர்கள் சாதனை

கடந்த கிழமை உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியானமை யாவரும் அறிந்ததே.எமது பாடசாலையில் கலைப்பிரிவில் 03மாணவர்கள்3A சித்திகளையும் 01 மாணவர் 2A,B சித்தி களையும் பெற்றமை சிறப்பம்சங்கள் ஆகும்.2010ம் ஆண்டின் பின்னர் கிடைத்த சிறந்த பெறுபேறு இதுவாகும்.2017ல் இரு கணித வர்த்தக பிரிவு மாணவர்கள் 3A சித்தி களை பெற்றிருந்தனர்.10 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More