Ymv Updates
மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
இன்று (12.07.2024) எமது வித்தியாலயத்தின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அகில இலங்கை சைவசமய பாடப் பரீட்சையில் வடமாகாண ரீதியில் சிறப்பு சித்தி.
விவேகானந்த சபை – கொழும்பு.அகில_இலங்கை_சைவசமய_பாடப்_பரீட்சையில்_வடமாகாண_ரீதியில்_சிறப்பு_சித்தி. செல்வி_லக்சிகா_தயானந்தன் இன்றைய தினம் இவருக்கான சிறப்புச் சான்றிதழும் பண வவுச்சரும் வித்தியாலய முதல்வர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.சைவ சமயத்தின் அடையாளங்களை வித்திட்டுச்செல்லும் கொழும்பு, விவேகானந்த சபையினருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.வளர்க உம் சைவப்பணி.வாழ்க வளமுடன்.
க பொ த சாதாரண தர மாணவர்களுக்கான கற்றல் கையேடு வழங்கல்.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கு பாரி சுயகற்றல் ஏடு -03 நூல்களை விநியோகிக்கும் நிகழ்வு 2024.03.21 ம் திகதி மு/யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி. மாலதி முகுந்தன் வலயக் கல்விப் பணிப்பாளர் துணுக்காய்…
மாணவர்களால் பயன்தருமரங்கள் மற்றும் நிழல்தருமரங்கள் நாட்டிவைக்கப்பட்டது
இன்றைய தினம் பாடசாலை மாணவர்களால் பயன்தருமரங்கள் மற்றும் நிழல்தருமரங்கள் நாட்டிவைக்கப்பட்டது
பாடசாலைத்தோட்டம் மேற்பார்வை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் நிகழ்வில்
தொழில் முனைவுடனான பாடசாலைத்தோட்டம் தொடர்பான மதிப்பீடு செய்வதற்காக வித்தியாலயத்தில் பாடசாலைத்தோட்டம் மேற்பார்வை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் நிகழ்வில்
