பாடசாலை அபிவிருத்தி குழு

கீழ்வரிசையின் வலமிருந்து இடமாக திருமதி.இ.மகாலிங்கம் (பெற்றோர்), திருமதி.செ.கருணாநிதி (ஆசிரியர்), திருமதி.சு.ரஞ்சன் (ஆசிரியர்),திரு.த.பிறெமச்சந்திரன் (அதிபர்), திரு.தி.கிரிதரன் (ஆசிரியர்), திருமதி.பு.யோகானந்தராஜா (ஆசிரியர்), திருமதி.ஜெ.ஞானேஸ்வரன் (பெற்றோர்), மேல்வரிசையின் வலமிருந்து இடமாக செல்வி.ச.சரணியா (பழைய மாணவி),திரு.இ.கிருபாகரன் (பழைய மாணவன்), திரு.சு.சுபநேசன் (ஆசிரியர்), திரு.கிரிதரன் (பெற்றோர்), திரு.த.பிறோமானந்தன் (பெற்றோர்), திருமதி.ச.உதயகுமார் (ஆசிரியர்). இலவசக் கல்வியின் பயனாக பண்புசார் தரம்மிக்க கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் ஊடாக பாடசாலை மட்டத்தில் தீர்மானங்களை எடுப்பதற்காக பாடசாலைகள் மேலும் பலப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. இதற்கமைய…

Read More

பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்

இலங்கை பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்கு கொண்டு பல மாற்றங்களை ஏற்படுத்த பழைய மாணவர் சங்கம் நிறைய பங்காற்ற முடியும் . இதன் தலைவர் பதவி வழியாக பாடசாலையின் அதிபராவார். யோகபுரம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமும் மிக நீண்ட வரலாற்றினை கொண்டது ஆயினும் இடப்பெயர்வின் பின்னர் 2022 ஆம் ஆண்டு காலம் வரையில் அது கவனிப்பாரற்று அதன் செயல்பாடுகள் ஸ்தம்பித்த நிலைக்கு தள்ளப்பட்டது ….

Read More

தூரநோக்கு (Vision) நோக்கக்கூற்று (Mission)

மகுடவாசகம் (Motto) “கலை பல கற்று நிலைபெறு வாழ்வில்” தூரநோக்கு (Vision) மாற்றமுறும் சமூக தேசிய சர்வதேச தேவைக்கமைவாக பெருமை மிகு பண்பாடு கொண்ட தேர்ச்சி மிகு மாணவர்களை உருவாக்கி தேசிய ரீதியில் முதன்மைப் பாடசாலையாக மிளிர்தல். நோக்கக்கூற்று (Mission) மாணவர்களின் ஆற்றல் மற்றும் விழுமியச் செயற்பாடுகளை கற்றல் கற்பித்தல் இணைபாட செயற்பாட்டின் மூலம் அதிகரித்தல். பெற்றோர்களின் முழுமையான பங்கேற்பிற்கு வழிசமைத்து வெளிப்படைத் தன்மையுடன் ஒற்றுமையான மேன்மை தங்கிய சமூகத்தை கட்டியெழுப்புதல். சமூகம், சமூகம் சார்ந்த திணைக்களம்…

Read More

பாடசாலைக்கீதம்

இராகம்:- காபி தாளம் :- ஆதி வாழியவே வாழியவே வாழிய வாழிய வாழியவே வாழிய யோகபுரம் மகா வித்தியாலயம் வாழிய வாழியவே வாழியவே எங்கள் மகா வித்தியாலயம் வளர்பிறை போல் வளர்ந்தெந்நாளுமே மேழி பிடித்திடும் உழவர்களின் மைந்தர் மேன்மையடைந்திட வாழியவே யோகபுரம் குடியேற்ற மக்களுக்கென ஓங்கி வளர்ந்திடும் வித்தியாலயம் ஏழைகள் உயர்ந்திட அரசினர் உதவிடும் இலவசக் கல்வி அளிக்குமிடம் செந்தமிழதனொடு ஆங்கில மொழியை பைந்தமிழ்ச் சிறுவர்கள் பயிலுமிடம் நம் தமிழ்க் கலைகளைநல்லாசிரியர்கள் நாட்டை முன்னேற்ற பயிற்றுமிடம் கணித…

Read More