Leadership Programmes
வார இறுதி வதிவிடப் பயிற்சி
19.06.2026 – 21.06.2026 வார இறுதி வதிவிடப் பயிற்சி மு/யோகபுரம் மகா வித்தியாலயம் மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் 2026.06.19 முதல் 2026.06.21 வரை மூன்று நாட்கள் கொண்ட வார இறுதி வதிவிடப் பயிற்சி கிளாரட் சிறுவர் கதம்பத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாணவர்களின் ஆளுமை விருத்தி, தம்மைப் பற்றி அறிதல் மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி, பல்வேறு பயனுள்ள அமர்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இப்பயிற்சியின் ஆரம்பமாக “நான் யார்?” என்ற…
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டம்
தூய்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு ஆகிய இணைந்து, ஹதபிம அதிகார சபை ஊடாக சூழலை நேசிக்கும் உணர்வுபூர்மான தலைமுறையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘இயற்கையான கற்றல் களம்’ கருத்திட்டத்தின் வடக்கு மாகாண ரீதியான நிகழ்வு முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை (02.10.2025) பாடசாலை அதிபர் த.பிறேமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
Clean Sri Lanka வேலைத்திட்டம்
Clean Sri Lanka வேலைத்திட்டம்————————————————நாட்டில் உள்ள 50 பாடசாலைகளில் பசுமை வலயங்களை உருவாக்கல் இலங்கையில் தேசிய மட்டத்தில் நடை பெறவுள்ள “Clean Sri Lanka” எனும் விசேட வேலைத்திட்டம் வருகிற 2025 அக்டோபர் 02 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலைகளுள், வடமாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலையாக எமது மு/யோகபுரம் மகாவித்தியாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிக்கிறோம். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சுத்தம், பாதுகாப்பு மற்றும்…
வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டம்
கல்வி அமைச்சின் “Clean steps – safe space” தேசிய வேலைத்திட்டம் துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் (9.07.2025) சிறப்பாக நடைபெற்றது. அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் ஒன்றினைந்து இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். அதோடு மரம் நடுகை செயற்திட்டமும் சிறப்பாக நடைபெற்று இறுதியாக கருத்தரங்குகள் மற்றும் நாடகங்களும் இடம்பெற்று செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது
மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு
இன்றைய தினம் (16) மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு.வெடிபொருட்களின் பாரிய பாதுகாப்பு
